உரிமைமீளல்
எனக்கு மிகவும் நெருங்கிய தோழியாயிருந்து பிறகு எந்தவொருதொடர்பற்றும் போயிருந்த தோழி ஒருத்தியை பலவருடங்கள் கழித்து எதிர்பாராமல் வழியில் காணநேரிட்டது. இருவரும் இருவரையும் ஞாபகப்படுத்தி அடையாளம்கண்டு உறுதிப்படுத்திக்கொள்ள எங்களுக்கு சிறிது நேரமாயிற்றுதான்.
அடையாளங்கண்டு, பரஸ்பர 'ஹாய்'கள் மற்றும் இதர நலவிசாரிப்புகளுக்குப் பிறகு, அவளுக்கு இப்போது திருமணமாகி குழந்தைகளும்கூட இருக்கின்ற காரணத்தாலோ என்னவோ, என்னையுமறியாமல் அவளை மன்னிக்கவும் அவரை மிகவும் மரியாதையாக வாங்க போங்க இல்லைங்க ஆமாங்க என்றே உரையாடிக் கொண்டிருந்தேன் நான்.
விடைபெறுந்தருணத்தில், "ஒழுங்கா மரியாதையா வாடி போடின்னு சொல்லிக்கூப்பிட்றா"னு கடைசியாகச் சொன்ன அவளது கவித்துவமான அந்த ஒற்றை செல்லக்கோவத்தின் வெளிப்பாட்டில் உணர்ந்து புரிந்துகொள்ள முடிந்தது, எங்களது நட்பானது இன்னும் உயிர்ப்புடன் எங்களிடத்தில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறதென்பதை.!
அடையாளங்கண்டு, பரஸ்பர 'ஹாய்'கள் மற்றும் இதர நலவிசாரிப்புகளுக்குப் பிறகு, அவளுக்கு இப்போது திருமணமாகி குழந்தைகளும்கூட இருக்கின்ற காரணத்தாலோ என்னவோ, என்னையுமறியாமல் அவளை மன்னிக்கவும் அவரை மிகவும் மரியாதையாக வாங்க போங்க இல்லைங்க ஆமாங்க என்றே உரையாடிக் கொண்டிருந்தேன் நான்.
விடைபெறுந்தருணத்தில், "ஒழுங்கா மரியாதையா வாடி போடின்னு சொல்லிக்கூப்பிட்றா"னு கடைசியாகச் சொன்ன அவளது கவித்துவமான அந்த ஒற்றை செல்லக்கோவத்தின் வெளிப்பாட்டில் உணர்ந்து புரிந்துகொள்ள முடிந்தது, எங்களது நட்பானது இன்னும் உயிர்ப்புடன் எங்களிடத்தில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறதென்பதை.!
அருமை
பதிலளிநீக்குநன்றி.!
நீக்கு