"எனக்கு நீ" என இந்த தலைப்பை எழுதி வைத்துவிட்டு ஒரு அரைமணிநேரம் சும்மாவே ஏதும் தோணாமல் வெறுமனே தலைப்பை மட்டுமே வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறேன் நான். 'ஏதும் தோணாமல்' என்பது சரியாக இங்கு* பொருந்தவில்லை, மிகச்சரியாக சொல்லவேண்டுமானால், இங்கு நீ என்பது நீ மட்டுமா, நீங்களா அல்லது நீயே பலவாறான உருவங்களைக்கொண்ட பன்மையா என ஏகப்பட்ட சிந்தனைகளின் நடுவில் சிக்கித்துக்கொண்டிருக்கிறேன். (*-ஏன் இங்கு, 'இங்கு' என்பதே சரியாக பொருந்தவில்லை, "ஏதும் தோணாமல் என்பது இங்கு சரியாகப் பொருந்தவில்லை" என்று வந்திருக்கவேண்டும்.) 'எனக்கு நீ' என்கிற தலைப்பில்தான் எதுவுமே நமக்கு சரியாக தோணமாட்டேன் என்கிறது, ஆதலால் தலைப்பை மாற்றலாம் என்று 'நீ எனக்கு' என மாற்றியும் யோசித்து ஒருபயனும் இல்லை என்றாகிப்போனபின், முடிவில் நீ என்பது நீதான் அது ஒருமையா இல்லை பன்மையா என்பதை முடிவுசெய்துகொள்வதும் நீயேதான் என சொல்லிமுடிக்கிறேன் அவசரமாக. என் செல்போனில் உன் கால்தான் இப்போது வந்துகொண்டிருக்கிறது, நான் நேரடியாகவே எனக்கு நீ யார்