இடுகைகள்

ஜூலை, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சும்மா பேருக்காக...

உங்களது பெயரே என்றைக்கேனும் உங்களுக்கு கோபமூட்டியுள்ளதா? உங்களது பெயரானது உச்சரிக்கப்பட்டதால் என்றைக்கேனும் கோபம் அல்லது வருத்தம் அடைந்துள்ளீர்களா? இங்கு நான் குறிப்பிடுவது, தமது பெயர் பிடிக்காமல் வருவதால் ஒருவருக்கு வரும் கோபத்தை வருத்தத்தைப் பற்றியோ, சாதி மத ரீதியிலான காரணத்தால் வரும் கோபத்தை வருத்தத்தைப் பற்றியோ அல்ல, மாறாக நமக்கு பிடித்த பெயரே நமக்கு இவ்வாறான உணர்வுகளை தருவதை பற்றியது. மனதுக்கும் உணர்வுக்குமான தொடர்பிலிருந்து இதனை வேறொரு கண்ணோட்டத்தில் கொஞ்சம் அணுகிப்பார்ப்போம். "என்னுடைய முழுப்பெயரை என் வாழ்நாளின்  கடைசிவரை உச்சரிக்காத உச்சரித்தும்விடாத ஒரு நண்பரை வேண்டுவதேயென் வேண்டல்.!" இக்கவிதையை படித்தவுடனே தங்களுக்கு என்ன தோன்றியது, என்னமாதிரியான உணர்வு வந்தது? ஒரு சிலருக்கு ஒரு மாதிரியாகவும் இன்னும் சிலருக்கு வேறு மாதிரியாகவும் வேறு சிலருக்கு பல மாதிரியாகவும் தோன்றியிருக்கும் முதலில் இது கவிதையா என்றேக்கூட உங்களில்  நிறையபேருக்கு சந்தேகம் தோன்றியிருக்கலாம். ஆம் இது ஒரு கவிதைதான், நம்புங்கள் ஏனென்றால் இதனை நான் எழுதவில்லை, ஆகவே நீங்கள் என்னை தாராளமாக நம்பலாம்.  நல்ல

இதயத்தின் வேண்டல்

படம்
குறிப்பு 1: நமது உடலில் 12 இணை விலா எலும்புகள் உள்ளன, அதாவது மொத்தம் 24. அதில் முதல் 7 இணைகள் உண்மை விலா எலும்புகள் அடுத்த 3 இணைகள் போலி விலா எலும்புகள் அடுத்த & கடைசியான 2 இணைகள் மிதக்கும் விலா எலும்புகள். குறிப்பு 2: "தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கு அயர்ந்த நித்திரையை வரப்பண்ணினார், அவன் நித்திரையடைந்தான்; அவர் அவன் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து, அந்த இடத்தைச் சதையினால் அடைத்தார்.தேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டுவந்தார். அப்பொழுது ஆதாம்: இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்; இவள் மனுஷனில் எடுக்கப்பட்டபடியினால் மனுஷி என்னப்படுவாள் என்றான். இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்." ஆதியாகமம் - 2: 21 - 24 குறிப்பு 3: திறந்த இதய அறுவை சிகிச்சை செய்யப்படும்போது, செய்யப்படும் நபரின் இதயத்தை ஒட்டியுள்ள ஒன்றிரண்டு விலா எலும்புகள் உடைக்கப்படும், அப்போதுதான் முழுமையாக அச்சிகிச்சையை சிறப்பாக செய்யமுடியும

எழுதுகோல் தந்த தூண்டுகோல்

கிரியாவூக்கி அல்லது காரணகர்த்தா இரண்டு வார்த்தைகளுமே ஏறக்குறைய ஒரே அர்த்தத்தை பிரதிபலிப்பதாகத் தான் தெரிகிறது, இரண்டிற்கும் பொருள் ஏதோ ஒன்று நிகழ அல்லது உருவாக காரணமான ஒன்று, இன்னும் தெளிவாக சொல்லப்போனால் இதன் விளைவாக உண்டான ஒரு முடிவு. இருப்பினும் கிரியாவூக்கி என்பது அஃறினைக்கும் பொருந்தும் அதாவது ஒரு சம்பவமோ, ஒரு எண்ணமோ, ஒரு சொல்லோ இன்னமும் ஏதுவாகவோகூட இருக்கலாம்.  காரணகர்த்தா என்பது உயர்திணைக்கு மட்டுமே பொருந்தும் கண்டிப்பாக ஒரு நபராக அல்லது ஒன்றிற்குமேலுள்ள நபர்களாக மட்டுமே இருப்பர். முதலில் 'காரணகர்த்தா' எனும் இவ்வார்த்தை உருவாக காரணமாக இருந்த காரணகர்த்தா நம் கர்த்தர் தான் என்பது என் கருத்து. கர்த்தர் தான் காரணம் என்கிற பதம்தான் இவ்வாறாக மாறியிருக்கிறது, ஆதலால் தான் காரணகர்த்தா என்கிறோம். உலகிலுள்ள அனைத்தையுமே உருவாக்கியவர் கர்த்தர் மேலும் இந்த உலகத்தையே உருவாக்கியவரும் அவர்தான். வேண்டுமானால் ஏதேனும் தேடுபொறியில் காரணகர்த்தா பொருள் என்ன என்று தேடிப்பாருங்களேன் 'முதற்கடவுள்' என்கிற முடிவினைத் தரும். அப்படியானால் கர்த்தர் தான் முதற்கடவுள் என்பது புலனாகிறது. மேலும் &#