சும்மா பேருக்காக...
உங்களது பெயரே என்றைக்கேனும் உங்களுக்கு கோபமூட்டியுள்ளதா? உங்களது பெயரானது உச்சரிக்கப்பட்டதால் என்றைக்கேனும் கோபம் அல்லது வருத்தம் அடைந்துள்ளீர்களா? இங்கு நான் குறிப்பிடுவது, தமது பெயர் பிடிக்காமல் வருவதால் ஒருவருக்கு வரும் கோபத்தை வருத்தத்தைப் பற்றியோ, சாதி மத ரீதியிலான காரணத்தால் வரும் கோபத்தை வருத்தத்தைப் பற்றியோ அல்ல, மாறாக நமக்கு பிடித்த பெயரே நமக்கு இவ்வாறான உணர்வுகளை தருவதை பற்றியது. மனதுக்கும் உணர்வுக்குமான தொடர்பிலிருந்து இதனை வேறொரு கண்ணோட்டத்தில் கொஞ்சம் அணுகிப்பார்ப்போம். "என்னுடைய முழுப்பெயரை என் வாழ்நாளின் கடைசிவரை உச்சரிக்காத உச்சரித்தும்விடாத ஒரு நண்பரை வேண்டுவதேயென் வேண்டல்.!" இக்கவிதையை படித்தவுடனே தங்களுக்கு என்ன தோன்றியது, என்னமாதிரியான உணர்வு வந்தது? ஒரு சிலருக்கு ஒரு மாதிரியாகவும் இன்னும் சிலருக்கு வேறு மாதிரியாகவும் வேறு சிலருக்கு பல மாதிரியாகவும் தோன்றியிருக்கும் முதலில் இது கவிதையா என்றேக்கூட உங்களில் நிறையபேருக்கு சந்தேகம் தோன்றியிருக்கலாம். ஆம் இது ஒரு கவிதைதான், நம்புங்கள் ஏனென்றால் இதனை நான் எழுதவில்லை, ஆகவே நீங்கள் என்னை தாராளமாக நம்பலாம். நல்ல