இடுகைகள்

ஜூலை, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நானும் சில பெண்களும் - 1

படம்
  ஒரு 17 வயது சிறுமி, தான் முதன்முதலாக அவளாகவே தன்னந்தனியே தைரியமாக வெளியே சென்றுவந்ததைப் பற்றி புலங்காகிதம் அடைந்து சிலாகித்து உங்களிடம் எப்போதேனும் கூறியிருக்கிறாளா என்று எனக்குத் தெரியாது, ஆனால் என்னிடம் ஒருமுறை ஒரு சிறுமி* கூறியிருக்கிறாள், “இன்னைக்கு நானே தனியா வெளிய போய்ட்டு வந்தேன். அப்பா எங்கையோ வெளில வேலையா போய்ட்டதால நானே காலேஜ்ல இருந்து தனியா பஸ் ஏறி, இங்க இறங்கி ரொம்ப பசிச்சுச்சுன்னு ஹோட்டலுக்கு போய், ஜூஸ் ஒன்னு ஆர்டர் பண்ணி குடிச்சுட்டு வந்தேன். இதுக்கும் அங்க பில்லு கட்டுற இடத்துல ஒரே கூட்டம், நான் பொறுத்துப் பொறுத்துப்பார்த்து கோவத்துல எவ்ளோ நேரமா நான் நிக்குறதுனு அவுங்கள்ட சத்தம் போட்டுட்டு ஆர்டர்பண்ணி அப்புறம் குடிச்சுட்டு வந்தேன், எல்லாரும் என்னையவே பாத்தாங்க. நான் யாரையும் கண்டுக்காம குடிச்சுட்டு வந்துட்டேன்.” என்பதாய் கூறினாள். கூறிய விசயத்தை விட கூறிய விதத்தில் அவ்வளவு ஆச்சரியம் அவளது கண்களில் நான் பார்த்தேன், இதற்கும் முதன்முதலில் இதனை பகிர்ந்து கொண்டதும் என்னிடம்தான். ( * - இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி 18 வயதிற்கு கீழுள்ள அனைவருமே சிறுவர் சிறுமியர் தான், இன்

நினைவில் நின்றவர்கள்

படம்
  நாம் எல்லோருமே நம்முடன் மிகவும் நன்றாக நெருங்கிப் பழகி, பின் ஏதோவொரு சந்தர்ப்ப சூழ்நிலையால் நம்மைவிட்டு பிரிந்துபோன எவரையோ மீண்டும் குறைந்தபட்சம் ஒருமுறையேனும் கண்டுவிட மாட்டோமா என்கிற ஏக்கத்தில் தேடியிருப்போம் அல்லது இப்போதும் தேடிக்கொண்டிருப்போம். அவர்கள் நமது பள்ளி அல்லது கல்லூரிப்பருவ நண்பர்களாக இருக்கலாம், அண்டை வீட்டுக்காரர்களாக இருக்கலாம், அலுவலக நண்பர்களாக இருக்கலாம், இன்னும் சொன்னால் பயணத்தில் நம்முடன் கூடப்பயணித்த சகப்பயணியாகக் கூட இருக்கலாம். அதாவது இன்றைக்கு மேம்பட்ட இணைய வசதி இருந்தாலும் அவர்களை தேடும் அளவிற்கு நம்மிடம் அவர்களது நினைவுகளைத்தவிர அவர்களைப் பற்றிய பெரிய அளவிலான தகவல்கள் இல்லாமலும் இருக்கலாம். அப்படி நான் சமீபத்தில், ஒரு பெண் அவருடன் சிறுவயதில் படித்த அவரது தோழியை தேடிக்கொண்டிருப்பதாக அவரது முகநூலில் பதிவிட்டிருந்ததை பார்த்தேன். அப்பெண்ணிடமும் அவர் தேடக்கூடிய தோழியைப் பற்றிய பெரிய தகவல்கள் ஏதும் இல்லை. இதனை நான் ஏன் இங்கு சொல்கிறேன் என்றால், நானும் அப்படிப்பட்ட இருவரை வெகுநாட்களாகத் தேடிக்கொண்டிருக்கிறேன். என்னிடமும் அவர்களது நினைவுகளைத் தவிர தேடிக் கண்டுபிட