நானும் சில பெண்களும் - 1
ஒரு 17 வயது சிறுமி, தான் முதன்முதலாக அவளாகவே தன்னந்தனியே தைரியமாக வெளியே சென்றுவந்ததைப் பற்றி புலங்காகிதம் அடைந்து சிலாகித்து உங்களிடம் எப்போதேனும் கூறியிருக்கிறாளா என்று எனக்குத் தெரியாது, ஆனால் என்னிடம் ஒருமுறை ஒரு சிறுமி* கூறியிருக்கிறாள், “இன்னைக்கு நானே தனியா வெளிய போய்ட்டு வந்தேன். அப்பா எங்கையோ வெளில வேலையா போய்ட்டதால நானே காலேஜ்ல இருந்து தனியா பஸ் ஏறி, இங்க இறங்கி ரொம்ப பசிச்சுச்சுன்னு ஹோட்டலுக்கு போய், ஜூஸ் ஒன்னு ஆர்டர் பண்ணி குடிச்சுட்டு வந்தேன். இதுக்கும் அங்க பில்லு கட்டுற இடத்துல ஒரே கூட்டம், நான் பொறுத்துப் பொறுத்துப்பார்த்து கோவத்துல எவ்ளோ நேரமா நான் நிக்குறதுனு அவுங்கள்ட சத்தம் போட்டுட்டு ஆர்டர்பண்ணி அப்புறம் குடிச்சுட்டு வந்தேன், எல்லாரும் என்னையவே பாத்தாங்க. நான் யாரையும் கண்டுக்காம குடிச்சுட்டு வந்துட்டேன்.” என்பதாய் கூறினாள். கூறிய விசயத்தை விட கூறிய விதத்தில் அவ்வளவு ஆச்சரியம் அவளது கண்களில் நான் பார்த்தேன், இதற்கும் முதன்முதலில் இதனை பகிர்ந்து கொண்டதும் என்னிடம்தான். ( * - இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி 18 வயதிற்கு கீழுள்ள அனைவருமே சிறுவர் சிறுமியர் தான், இன்