பாட்டி சொல்லைத் தட்டாதே
மிகவும் நெருங்கிய ரத்த சொந்தமான ஒருவரது திருமணத்திற்கு என்னையையும் சேர்த்து எங்கள் வீட்டில் எல்லாருக்கும் புதுத்துணி எடுக்க கிளம்பலாம் என்று எல்லோரும் புறப்படும் வேளையில், என் தாய் அப்போது நானணிந்திருந்த உடையை மாற்றிவிட்டு வேறொரு நல்ல ஆடையுடுத்தி வரும்படி கூறினார்கள் (என்னுடைய ட்ரெஸ்ஸிங் சென்ஸ் பற்றி என்னை நன்கு அறிந்தவர்களுக்கு தெரியும், அப்படி ஒன்று என்னிடம் இல்லையென்று). அதற்கு நான், "ஏம்மா இதுக்கு என்ன குறைச்சல் நல்லாத்தானே இருக்கு, நீங்க எடுத்து குடுத்ததுதானா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் கண்றாவியா இருக்கு சகிக்கல, நாம போட்டுப்போற டிரெஸ்ஸே கடைக்காரனுக்கு காட்டிக்குடுத்துரும் நாம வாங்குவோமா மாட்டோமா எப்படிப்பட்டவங்கனு, காஸ்ட்லியான டிரெஸ்ஸ கண்ணுலகாட்டவே மாட்டாங்க, ஒழுங்கா போய் மாத்திட்டுவான்னா வா" என்றார்கள். உடனே நான், "Dont judge a book by its coverனு பழமொழியிருக்கே, ஒன்ன வாங்குறதும் வாங்காம போறதும் நம்ம இஷ்டம்தானம்மா, இதுல நம்ம டிரஸ் நம்மள என்னாப்பண்ணுச்சு, எவ்ளோ காஸ்ட்லினாலும் புடிச்சிருந்தா நாம வாங்கத்தான போறோம்" என்றேன். "அதெல்லாம் தெர