நினைவில் நின்றவர்கள்
நாம் எல்லோருமே நம்முடன் மிகவும் நன்றாக நெருங்கிப் பழகி, பின் ஏதோவொரு சந்தர்ப்ப சூழ்நிலையால் நம்மைவிட்டு பிரிந்துபோன எவரையோ மீண்டும் குறைந்தபட்சம் ஒருமுறையேனும் கண்டுவிட மாட்டோமா என்கிற ஏக்கத்தில் தேடியிருப்போம் அல்லது இப்போதும் தேடிக்கொண்டிருப்போம். அவர்கள் நமது பள்ளி அல்லது கல்லூரிப்பருவ நண்பர்களாக இருக்கலாம், அண்டை வீட்டுக்காரர்களாக இருக்கலாம், அலுவலக நண்பர்களாக இருக்கலாம், இன்னும் சொன்னால் பயணத்தில் நம்முடன் கூடப்பயணித்த சகப்பயணியாகக் கூட இருக்கலாம். அதாவது இன்றைக்கு மேம்பட்ட இணைய வசதி இருந்தாலும் அவர்களை தேடும் அளவிற்கு நம்மிடம் அவர்களது நினைவுகளைத்தவிர அவர்களைப் பற்றிய பெரிய அளவிலான தகவல்கள் இல்லாமலும் இருக்கலாம். அப்படி நான் சமீபத்தில், ஒரு பெண் அவருடன் சிறுவயதில் படித்த அவரது தோழியை தேடிக்கொண்டிருப்பதாக அவரது முகநூலில் பதிவிட்டிருந்ததை பார்த்தேன். அப்பெண்ணிடமும் அவர் தேடக்கூடிய தோழியைப் பற்றிய பெரிய தகவல்கள் ஏதும் இல்லை. இதனை நான் ஏன் இங்கு சொல்கிறேன் என்றால், நானும் அப்படிப்பட்ட இருவரை வெகுநாட்களாகத் தேடிக்கொண்டிருக்கிறேன். என்னிடமும் அவர்களது நினைவுகளைத் தவிர தேடிக் கண்டுபிட
கருத்துகள்
கருத்துரையிடுக